For Daily Alerts
Just In
அழகிரியின் காவல் ஜூலை 30 வரை நீட்டிப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரியின் காவல் ஜூலை 30ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
அழகிரியின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், அவர் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவருக்கு வயிற்றுப் போக்கு இருப்பதாகவும், இதனால் பயணம் செய்யக் கூடாது என்று டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளதாலும், காவல் பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை என்பதாலும் அவரை மதுரைக்குக்கொண்டு வர முடியவில்லை என்று கூறி சிறை நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் ஜூலை30ம் தேதி வரை அழகிரியின் காவலை நீட்டித்து நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.அழகிரி கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படாதது இது இரண்டாவது முறையாகும்.
Comments
Story first published: Thursday, July 17, 2003, 5:30 [IST]