கர்நாடகம் காவிரி நீரை விடாது: விவசாயிகள் அவநம்பிக்கை
தஞ்சாவூர்:
உச்சநீதிமன்றம் கூறியே காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு, அங்கிருந்து தமிழகம் வந்துள்ளவிவசாயிகள் குழு கூறியா தண்ணீர் திறந்து விடப் போகிறது என்று காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளின் நிலையை அறிவதற்காக கர்நாடகத்திலிருந்து விவசாயிகள் குழுபுட்டண்ணய்யா என்பவரின் தலைமையில் வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும்சென்று அவர்கள் நேரில் நிலைமையைப் பார்த்து வருகிறார்கள்.
ஆனால், இவர்களது வருகையால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை.
கர்நாடக அரசின் காலம் தாழ்த்தும் முயற்சியே இது என்று அவர்கள் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையேகர்நாடக அரசு மதிப்பதில்லை.
இந் நிலையில் 14 விவசாயிகள் மட்டுமே அடங்கிய குழுவின் கோரிக்கையை கர்நாடக அரசு எப்படி ஏற்கும் என்றுஅவர்கள் அவநம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
தமிழக காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட்டு வரும் விவசாயிகள் குழுவினர், தமிழக காவிரி டெல்டாமாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.