சென்னையில் மீண்டும் மீண்டும் பிடிபடும் கஞ்சா சாக்லேட்டுகள்
சென்னை:
சென்னை நகரில் தொடர்ந்து கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டு வருகின்றன. இன்று ரூ. 7.2 லட்சம் மதிப்புள்ளகஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டன.
சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த வாரம் ஒரு மளிகைக் கடையிலிருந்து 46 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் அநாதையாக கிடந்தபார்சலை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதிலும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாசாக்லேட்டுகள் இருந்தன.
இந் நிலையில் இன்று மீண்டும் சென்டிரல் ரயில் நிலையத்தில் கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல் ஒன்றை போலீஸார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் ரூ. 7.2லட்சம் மதிப்புள்ள 36 கிலோ எடையுள்ள கஞ்சா, அபின் சாக்லேட்டுகள் இருந்தன.
இவை மாநில அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் நடந்துள்ள 3வது கஞ்சாசாக்லெட் பறிமுதல் இது.