For Daily Alerts
Just In
வேலூரிலும் காலரா: இதுவரை 3 பேர் பலி
வேலூர்:
தர்மபுரி மாவட்டத்தைச் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் காலரா பரவி வருகிறது.
சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலரா பரவியதில் 17 பேர் வரை உயிழந்தனர். இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திற்கும் காலரா பரவியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காலரா பரவியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வயதுக் குழந்தை மற்றம் கண்ணன்,பாக்கியம்மாள் ஆகிய 3 பேர் இந்தக் காலராவுக்குப் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து காட்பாடி பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. காலராவைக் கட்டுப்படுத்தஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, July 17, 2003, 5:30 [IST]