மழை நீர் சேகரிப்பு: வேலையிலலா பட்டதாரிகளை பயன்படுத்த திட்டம்
சென்னை:
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மழைநீர் சேமிப்பு பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
வேலையில்லாத பட்டதாரி, பட்டய பொறியாளர்கள் (டிப்ளமோ,) மற்றும் தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ்பெற்றவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க குடிநீர் வடிகால்வாரியம் முடிவு செய்துள்ளது.
தகுதியுள்ளவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள்தங்களது கல்வித்தகுதி பற்றிய சான்றிதழ்களுடன், எந்த மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்து, கிராமபஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்ற விருப்பம் என்பதையும் குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்குஇம்மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
முதல்கட்டமாக 500 பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. தேர்வு செய்யப்படும் முறை, சம்பளவிகிதம் ம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படுமாம்.