மதுரை கஞ்சா பெண்கள்; ரூ. 1.4 கோடி பண விவகாரத்தில் நடராஜன்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Natrajanமதுரையில் கஞ்சா, ஹெராயின் கடத்திய வழக்கில் கைதான தாய், மகள் விவகாரத்தில் சசிகலாவின் கணவர்நடராஜனின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.

மதுரை தாசில்தார் நகரில் வசித்து வந்த இந்த இரு பெண்களின் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தரூ. 1.4 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Janani

ஏர்ஹோஸ்டஸ் உடையில் ஜனனி

தாசில்தார் நகரில் உள்ள அன்புநகர் பாரத் தெருவில் ஒரு வீட்டுக்கு சில வருடங்களுக்கு முன் வாடகைக்குக்குடியேறியவர்கள் பாண்டியத் தேவர்- ரமிஜா தம்பதி. இஸ்லாமியரான ரமிஜா, பாண்டியத் தேவரை காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது பெயரை ரெஜினா என்று மாற்றிக் கொண்டார் ரமிஜா.

இவர்களுக்கு ராஜா, ஜனனி (வயது 21) என்று இரு குழந்தைள். இதில் ராஜா கொல்கத்தாவில் வேலை பார்த்துவருகிறார்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாண்டியத் தேவர் இறந்துதுவிட்டார். இதையடுத்து ரெஜினாவும் (வயது 41),ஜனனியும் அதே வீட்டில் வசித்து வந்தனர். ராஜா மதுரைக்கு வருவதே இல்லை.

மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த ஜனனிக்கு விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்று ஆசைவர, தனது நடை உடையை மாற்றினார்.

மிக மார்டனாக வலம் வந்தார். சென்னையில் ஒரு கல்வி நிலையத்திலும்விமானப் பணிப் பெண் பயிற்சிக்காக போய் வந்தார்.

அப்போது தான் சில முக்கியஸ்தர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டுளளது.

இதன் பின்னர் குடியிருந்தவீட்டையே வாங்கும் அளவுக்கு வசதியும் வந்துள்ளது.

வீட்டில் ஏ.சி, செல்போன்கள் என தாயும் மகளும் வலம்வந்தனர். இது அக்கம் பக்கத்தினருக்கு புகைச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

Rejina jananis new Car

ரெஜினா- ஜனனி சமீபத்தில் வாங்கிய ஹூயூண்டாய் கார்

இந் நிலையில் ஹூயுண்டாய் அசெண்ட் காரும் வாங்கினர். அடிக்கடி காரில் வெளியே போவது, வருவது என்றுஇருந்தனர். இவர்களது கைகளில் திடீரென ஏராளமான பணம் புரளவே அக்கம் பக்கத்தினருக்கு சந்சேகம்ரொம்பவே அதிகமாகிவிட அதில் சிலர் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.

இதையடுத்து போலீசார் இவர்களது வீட்டை அதிரடியாக சோதனையிட்டபோது கஞ்சா, அபின் ஆகியவை கிலோகணக்கில் சிக்கியதாவும், ரூ. 1.4 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Rejina jananis house

ரெஜினாவின் மதுரை தாசில்தார் நகர் வீடு

இந் நிலையில் இவர்கள் வீட்டில் பணம் இருந்தது உண்மை தான் என்றும், ஆனால், கஞ்சா இருந்ததாக போலீஸ்சொல்வது சரியல்ல என்றும் ஒரு தரப்பில் கூறுகின்றனர்.

ஏர்ஹொஸ்டஸ் கனவில் இருந்த ஜனனியை, தாயாரே பல முக்கிய புள்ளிகளிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அதன்மூலம் முறைகேடாக ஜனனி பணம் ஈட்டியதாகவும் தெரிகிறது. மேலும் ஒரு கட்டத்தில் அதிமுக புள்ளி மூலம்நடராஜனும் ஜனனிக்கு அறிமுகமானதாகவும் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாகவும்,சமீபத்தில் ரகசிய திருமணமும் கூட செய்து கொண்டு சில நாடுகளுக்கு ஜாலி டூர் போய் வந்ததாகவும் தகவல்கள்வரத் தொடங்கியுளளன.

இதைத் தெரிந்து சசிகால குடும்பத்தினர் நடராஜனுடன் மோத, இறுதியில் ரெஜினாவையும் ஜனனியையும் பிடித்துஉள்ளே போட திட்டமிடப்பட்டு, கஞ்சா கேஸ் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

வீட்டில் பிடிபட்ட பணம் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மூலம் தான் ஜனனிக்கு வந்திருக்க வேண்டும்என்கிறார்கள்.

ரூ.1.40 கோடு பணம் கைப்பற்றப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருப்பாயூரணி போலீஸ்ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாரில் இருந்து எஸ்.ஐ. வரை யாருக்குமே எந்த தகவலுமே தெரியவில்லை.

எல்லாமே இன்ஸ்பெக்டர் கணேசன் நேரடி விசாரணையில் நடைபெறுவதாக கூறுகின்றனர். எதைக் கேட்டாலும்இன்ஸ்பெக்டரிடமே கேட்டு கொள்ளுமாறு கூறி போலீஸார் வாய்திறக்க மறுக்கின்றனர்.

கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு நீதிபதிசம்பத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து 1.4 கோடி பணம் போலீஸ் ஸ்டேஷசனில் மிக பலத்த பாதுகாப்புடன்வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண வாழ்க்கை நடத்தி வந்த இந்த பெண்களின் வாழ்க்கையில் கடந்த 9 மாதங்களில் தான் ஆடம்பரம்அதிகரித்துள்ளது. இந்சக் கால கட்டத்தில் ரெஜினாவும் ஜனனியும் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும்எம்.நடராஜனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்போது இவருக்குநடராஜன் ஏகப்பட்ட பணம், நகைகளைத் தந்ததாகவும் கூறுகின்றனர்.

Sasikalaஇந்த பெண்களின் மதுரை வீட்டில் சோதனை நடந்தபோது ஒரு பெட்டி நிறைய தங்க நகைகளை போலீஸார்கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த நகைகள் எங்கே என்பதற்கும் சரியான பதில் இல்லை.

நிறைய கஞ்சா, ஏகப்பட்ட பணம், அதே நேரத்தில் சிறிது நகைகள் இருந்ததாகக் கூறி வழக்கு போடுமாறு மேலிடம்மதுரை போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து நகைகள் சென்னையில் ஒரு முக்கியபுள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் நீலாங்கரையில் இவர்களுக்கு ஒரு பங்களாவும் உள்ளது. கைது செய்யப்பட்ட ரெஜினாவும் ஜனனியும்இந்த வீட்டுக்கும் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இப்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+