காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ரூ. 1.4 கோடி!
மதுரை:
மதுரையில் மடந்த சோதனையின்போது 2 பெண்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணத்தைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்திருக்குமாறு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தாசில்தார் நகர் பகுதியில் சமீபத்தில் நடந்த சோதனையில் ஜெரீனா மற்றும் ஜனனி ஆகிய இருபெண்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ. 1.40 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களதுடிரைவர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தன்னை தனியார்விமான நிறுவனத்தின் ஊழியர் என்று ஜெரீனா அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். ஏகப்பட்ட பணம், கார்கள் எனமதுரையில் வலம் வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர்களை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தினர். அப்போது கஞ்சா மற்றும் பணத்தை கருப்பாயூரணி காவல் நிலையத்திலேயே பத்திரமாகவைத்திருக்குமாறு நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து பணம் பலத்த பாதுகாப்புடன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளசுய












Click it and Unblock the Notifications