போலீஸைத் தாக்கி கள்ளச்சாராய வியாபாரிகள் மீட்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மீன்சுருட்டியில், போலீஸாரிடம் பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாகள் 4 பேரை,கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதிரடியாக மீட்டுச் சென்றது.
போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
தடுத்த போலீஸாரையும் அக்கும்பல் தாக்கியது.
மீன்சுருட்டிக் காவல் நிலையத்தினர், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் சாத்துக்குளம் என்ற இடத்தில்கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
அப்போது நான்கு பேரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம் பிடிபட்டது.
நான்கு பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி உட்கார வைத்த போலீஸார் அப்பகுதியில் வேறு யாரும்மறைந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. கத்தி, கட்டைகளுடன் வந்தஅக்கும்பல் போலீஸாரைத் தாக்கியது.
பின்னர் ஜீப்பில் உட்கார வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய வியாபாகளையும், கள்ளச்சாராயத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியது.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்துபோன போலீஸார் சுதாரித்துக் கொண்டு மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழிக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். காயமடைந்த சில போலீஸார் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றனர்.












Click it and Unblock the Notifications