மூத்த குடிமக்களுக்கு உயர்நீதிமன்றத்தில் சிறப்பு வசதி
சென்னை:
மூத்த குடிமக்களான 60 வயதுக்கு மேற்பட்டோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யசிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.எனவே, வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய வரும் முதியோர்கள் சரியான பிரிவைக் கண்டுபிடித்து,காத்திருந்து மனுவைத் தாக்கல் செய்வதற்குள் சோர்ந்து போய் விடுகிறார்கள்.
இது குறித்து வழக்கறிஞர் சுப்ரமணியம் என்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின்கவனத்திற்குக் கொண்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து சுபாஷன் ரெட்டியின் உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற பதிவாளர் ஆறுமுகப்
பெருமாள் ஆதித்தன் அறை முன் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டியில் காலை முதல் முத்த குடிமக்கள தங்களது மனுக்களைப் பதிவு செய்து போடலாம். மாலை 4மணிக்கு இந்த பெட்டி திறக்கப்பட்டு மனுக்கள் எடுக்கப்பட்டு உரிய பிரிவில் சேர்ப்பித்து வழக்குப் பதிவுசெய்யப்படும்.
இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அசெளகரிங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications