For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளங்கோவன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது ஜெ. இன்னொரு அவதூறு வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளங்கோவன் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இந் நிலையில் மேலும்ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சாவுக்கு முதல்வர்ஜெயலலிதாவின் பிடிவாதப் போக்கே காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திகைக்கு இளங்கோவன் முன்புபேட்டி கொடுத்திருந்தார்.

இது முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறி சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயபால், இந்த வழக்குத் தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதி இளங்கோவன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பின் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிட்டார்.

முன்பு இந்து பத்திரிக்கை மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளைப் போட்டது. இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்மீது போட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X