டிரான்ஸ்பருக்கு காரணமாக இருந்த கைதியை விரட்டி பிடித்த வார்டன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நான்கு கைதிகளில் ஒருவனை சிறையின் வார்டன் மேலூர்பஸ் நிலையத்தில் விரட்டிப் பிடித்தார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா (40), கருவாயன் என்ற சால்னாபாண்டி (35), கந்தசாமி (31), சண்முகக்கனி (24) ஆகிய நான்கு கைதிகளும் அரசு ராஜாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தனர்.

அங்கிருந்து இந்த நால்வரும் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக மதுரை மத்திய சிறையின் துணை வார்டன் பாண்டியை வேலூர்துணை ஜெயிலுக்கு அரசு இடமாற்றம் செய்தது.

இதனால் பாண்டி தினமும் மதுரையில் இருக்கும் தனது வீட்டிலிகுந்து மேலூர் சிறைக்கு பணிக்குச் சென்று திரும்பிவருகிறார்.

இந் நிலையில் மேலூர் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்சுக்காக பாண்டி நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்தகந்தசாமியை அடையாளம் கண்டுவிட்டார். அதே போல கந்தசாமியும் பாண்டியைப் பார்த்துவிட்டு அங்கிருந்துஓட ஆரம்பித்தான்.

தனது டிரான்ஸ்பருக்குக் காரணமாக இருந்த கந்தசாமியை சிறை வார்டன் பாண்டி விடாமல் துரத்தினார். முள்புதர்கள், பள்ளம், மேடு என விரட்டிச் சென்றார். நீண்ட ஓட்டத்துக்குப் பின் கைதி கந்தசாமியை பாண்டிபிடித்துவிட்டார்.

கந்தசாமியை கையைக் காலைக் கட்டி மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

துணை வார்டன் பாண்டி ஒரு ஓட்டப் பந்தய வீரராவார். இதை வைத்துத் தான் போலீஸ் வேலையிலேயே சேர்ந்தார்.

தனது திறமையை எல்லாம் சேர்த்துக் கொண்டு ஓட, ஓட விரட்டி கைதியைப் பிடித்துக் காட்டியுள்ளார் பாண்டி.

இதனால் அவருக்கு மீண்டும் மதுரைக்கே டிரான்ஸ்பர் தரப்படுமா என்று தெரியவில்லை.

தப்பிய மற்ற மூன்று கைதிகளில் ஒருவன் போலீசில் சரணைந்துவிட்டான். இன்னும் இரண்டு பேர்தலைமறைவாகவே உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+