மகள் தற்கொலை எதிரொலி: சென்னை தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை
சென்னை:
மகள் தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சல் அடைந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தனதுமனைவி, மகளுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தவர் கந்தசாமி. இவர் 11 மினி லாரிகள் மற்றும் வேன்களை வைத்துதொழில் நடத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்த தனது மகள் ரம்யாவை திட்டியுள்ளார். இதனால்மனமுடைந்த ரம்யா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி மன உளைச்சலுக்கு ஆளானார். மனைவி மற்றும் இன்னொரு மகளுடன்சேர்ந்து அழுதவண்ணம் இருந்தார். குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந் நிலையில் நேற்றிரவு கந்தசாமி, மனைவி சித்ரா, மகள் திவ்யா ஆகியோர், ரம்யா தூக்குப் போட்டு இறந்த அதேஅறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இச் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications