சிறுமியை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:
8 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஸ்ரீதர். இவரது பக்கத்து தெருவில் வசித்து வருபவர் முனுசாமி.இவரது மகள் லட்சுமி. 8 வயது சிறுமியான லட்சுமி, 3வது வகுப்புப் படித்து வருகிறாள்.
இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டு லட்சுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீதர், அங்கு வைத்துலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
மிகக் கொடூரமாக செயல்பட்டு, சிறுமியை மன மற்றும் உடல்ரீதியில் கொடுமை செய்த ஸ்ரீதரின் செயல் மன்னிக்கமுடியாத குற்றம் என்று கூறிய நீதிபதி விமலா, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1,000அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.