4 குழந்தைகள் சாவுக்கு காரணமான வேன் டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே வேன் மீது ரயில் மோதி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்த வேன்டிரைவர் திருச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகே சில நாட்களுக்கு முன் ஆளில்லா ரயில்வே கிராசிங் பகுதியில் தண்டவாளத்தில் சிக்கிய வேன் மீதுசோதனைரீதியில் இயக்கப்பட்ட ரயில் மோதியதில், வேனில் இருந்த 4 சிறுமிகள் மற்றும் வேன் கிளீனர் ஆகியோர்பரிதாபமாக இறந்தனர். ஆனால், வேன் டிரைவர் தப்பிவிட்டார்.
வேன் டிரைவர் செந்திலின் அலட்சியப் போக்கு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் வருவதைகவனிக்காமல் வேனை தண்டவாளத்தில் ஏற்றியதால் இந்த விபத்து நடந்தது.
இதைத் தொடர்ந்து தலைமறைவான வேன் டிரைவர் செந்தில், திருச்சியில் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications