அழகிரிக்கு ஜாமீன் தர உயர் நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மு.க.அழகிரியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரி, திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் அழகிரி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகனகராஜ் விசாரித்தார்.
அப்போது, விசாரணை அளவில் வழக்கு உள்ளதால், இப்போது அழகிரியை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக்கலைத்து விடுவார் என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அழகிரிக்கு ஜாமீன் வழங்க நீதிபதி கனகராஜ் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications