ஆயுதங்களை குவிக்கும் புலிகள்: பேச்சுக்கும் தயார்
கொழும்பு:
பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் தங்களை ஆயுத ரீதியிலும் விடுதலைப் புலிகள் பலப்படுத்திவருகின்றனர்.
கிழக்கு இலங்கையில் சுமார் 5,000 விடுதலைப் புலிகள் மத்தியில் அதன் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
இடைக்கால நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசு எங்களிடம் தந்துள்ள திட்டத்தை ஆராய்ந்து வருகிறோம்.அமைதி முயற்சிகளுக்கும் பேச்சுவார்த்தைக்கும் எங்களது கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.
அதே நேரத்தில் சிங்கள ராணுவம் ஆயுதங்களைக் குவிப்பதிலும், படைகளை நவீனமாக்குவதிலும் தீவிரமாகஈடுபட்டுள்ளது. ஆனால், நாங்கள் தான் ஆயுதங்களைக் குவித்து வருவதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
எங்கள் ஆயுத பலத்தை நாங்கள் பராமரித்து வருவது உண்மை. எங்கள் மக்களைக் காக்கத் தேவையான பலத்தைபராமரிக்க எங்களுக்கு உரிமை உண்டு. பேத்துவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவும் எங்கள் மீது போர்திணிக்கப்பட்டால் அதை சந்திக்கவும் எங்களுக்கு பலம் வேண்டும். அதற்கான ஆயுத பலத்தைத் தான் புலிகள்பராமரித்து வருகின்றனர்.
எந்த நாட்டையும் தாக்கவோ, பிற இன மக்களை அழிக்கவோ நாங்கள் எங்களை பலப்படுத்தவில்லை. எங்கள்மக்களைக் காக்கவும், எங்கள் சமூகத்தைப் பேணவும், நாட்டைக் காக்கவுமே ஆயுதம் வாங்குகிறோம.
இலங்கை அரசு தந்துள்ள இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. எங்கள்தலைமை அது குறித்து சட்ட, நிர்வாக நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. விரைவில் எங்களது திட்டத்தையும்அரசிடம் சமர்பிப்போம்.
அதில் எங்கள் மக்களுக்கு என்ன வேண்டும், இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிளக்குவோம். நாங்கள் தரும் திட்டத்தை அரசு ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு முன் வருவோம் என்றார்தமிழ்ச்செல்வன்.
இதற்கிடையே, இன்னும் சில வாரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என இலங்கை அரசுநம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் பெரிஸ் கூறுகையில், இடைக்கால நிர்வாகம் குறித்து நாங்கள் கொடுத்துள்ள திட்டத்தைபுலிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் சில வாரங்களில் பேச்சு தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications