For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கபிணி அணையை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீர்தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.

நேற்று மாலை வரை விநாடிக்கு 2300 கன அடி நீர் வந்தது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி விநாடிக்கு 5608கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 3035 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.அணையின் நீர்மட்டம் 28.32 ஆக உயர்ந்து உள்ளது.

கர்நாடகப் பகுதிகளில் மழை நீடித்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கூடுதலாக நீர் வரத் தொடங்கியுள்ளதால் காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X