For Daily Alerts
Just In
இரட்டைக் கொலை செய்தவர் குடும்பத்தோடு தற்கொலை
நாமக்கல்:
மாமியாரையும், உறவினரையும் வெட்டிக் கொன்ற மருமகன், தனது மனைவி,மகளோடு தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விசைத்தறி தொழிலாளர். இவர் நான்குமாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு சென்றார்.
அங்கு உறவினர்களுக்கிடையே சண்டை மூண்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மாமியார்வெங்கடம்மாள், உறவினர் பிரத்தீப் ஆகியோரை வெட்டிக் கொன்றார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால்இரட்டைக் கொலை செய்தவர் என்ற காரணத்தால் அவரது வேலை பறிக்கப்பட்டது. வேறு எங்கும் வேலைகிடைக்கவில்லை.
இதனால் மனம் வெதும்பிய அவர் தனது மனைவி காஞ்சனா தேவி, மகள் நித்யா ஆகியோருடன் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Story first published: Monday, May 3, 2004, 5:30 [IST]