அரசு ஊழியர் வழக்கை விசாரிக்கப் போகும் 3 நீதிபதிகள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் குழு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000 ஊழியர்களில் 8063 பேருக்கு மீண்டும் வேலைகொடுக்குமாறும், மீதள்ள 6072 பேர் தொடர்பான வழக்குகளை 3 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட குழு மூலம் விசாரிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து 8063 பேருக்கு மீண்டும் வேலை கொடுப்பதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.நேற்று பல ஊழியர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். திங்கள்கிழமை அனைவருக்கும் வேலைதரப்பட்டுவிடும்.

மீதமுள்ள 6072 பேர் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, 3 ஓய்வு பெற்ற நீதிபதிகளை தேர்வு செய்யும்பணியில் அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. அவர்களது பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 3நீதிபதிகளைத் தேர்வு செய்யும்படி கோரியுள்ளது. அதன்படி, நாளை உயர்நீதிமன்றம் 3 பேரின் பெயர்களைதிங்கள்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+