மதானியின் ஜாமீன் மனு: ஆக. 20ம் தேதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானி, தனக்கு ஜாமீன் கோரி தாக்கல்செய்துள்ள மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக மதானி உள்ளார். கோவை குண்டு வெடிப்புவழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி இவர்தாக்கல் செய்த பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் அவர் மனு செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications