For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை செயலக ஊழியர்களுக்கு கிடுக்கிப் பிடி: பொன்னையனிடம் பொறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக தலைமைச் செயலக ஊழியர்களின் பணி முறையை சீரமைப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டகுழுவின் தலைவராக நிதியமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்,

இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட இக் குழுவில், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதாஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலர் மெய்கண்டதேவன், பொதுத்துறை செயலர்பிச்சாண்டி, நிதித்துறைச் சிறப்புச் செயலர் கிருஷ்ணன் ஆகியோர் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இப்போது இந்தக் குழுவுக்கு பொன்னையன் தலைவராக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலக பணிகள் தொடர்பான 16 அம்சங்கள் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். தலைமைச் செயலக ஊழியர்களின் சலுகைகளைக் குறைத்தல், இடமாற்றம், அதிகார வரம்புகளைக்குறைத்தல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.

தலைமைச் செயலக பணியாளர்கள், வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதில்லை. இனி அதையும் மாற்றிஅவர்களுக்கும் பிற ஊழியர்கள் போல இட மாறுதல்களை அளிப்பது குறித்தும் இக் குழு பரிந்துரைகளைச்செய்யும்.

ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை தருவது, வேலையில் அதிக கவனம் செலுத்த வைப்பது, வேலைகளைகுறித்த நேரத்தில் முடிக்க காலக் கெடு நிர்ணயிப்பது, ஊழியர்களின் பொறுப்புகளை அதிகரிப்பது, அவர்களைகட்டாயம் கம்ப்யூட்டர்களை கையாளச் செய்வது ஆகியவை குறித்தும் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை அளிக்கஉள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X