3 பெண் குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று கிணற்றில் வீசிய தாய் தானும் தற்கொலைசெய்து கொண்டார்.

தொப்பூர் அருகே உள்ளது சந்தனூரான் கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தி. இவருக்கு வயது 26.இவருக்கும், மல்லேஷ் என்பவருகும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்குராஜகுமாரி, தேவி, ஜோதி ஆகிய மகள்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் மல்லேஷ் சண்டை போட்டு வந்ததாகத் தெரிகிறது. மூன்றும் பெண்குழந்தைகளே பிறந்ததால் ஆண் குழந்தைக்காக தான் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும்,அதற்கு சம்மதம் என எழுதித் தருமாறும் கூறி ஜெயகாந்தியை, மல்லேஷ் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு ஜெயகாந்தி ஒப்புக் கொள்ளவில்லை, கணவன் செயல்களால் வெறுப்புற்ற அவர்சில நாட்களுக்குமுன் தனது தாய் வீட்டுக்கு மகள்களுடன் சென்றார்.

மனைவியைத் தேடி மல்லேசும் அங்கு சென்றார். ஆனால் அதற்குள், ஜெயகாந்தி தனது குழந்தைகளுடன்சந்தனூரான் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இதையடுத்து மல்லேஷ் மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார்.

வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஜெயகாந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். 3 குழந்தைகளும்வீட்டருகே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தன.

3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து இறந்த பின்னர் அவர்களை கிணற்றில் வீசியுள்ளார் ஜெயகாந்தி. பின்னர்தானும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+