இனி தீபாவளிக்கு கூட விடுமுறை இல்லை..
சென்னை:
அரசு ஊழியர்களுக்கு எதிரான முதல்வர் ஜெயலலிதாவின் கடிவாளம் இறுகி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை இனி வருடத்துக்கு மூன்றே நாட்களாகக் குறைக்க அவர் முடிவுசெய்துள்ளார். சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகியவை தான் அந்த நாட்கள். இப்போது சனி,ஞாயிறு தவிர ஆண்டுக்கு 23 விடுமுறை நாட்கள் உள்ளன.
ஜெயலலிதாவின் புதிய திட்டப்படி பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் அரசு அலுவலகங் இயங்க வேண்டும்.இந்த தினங்களிலும் பிற இந்துப் பண்டிகை தினங்களிலும் இந்து ஊழியர்கள் விருப்ப விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் அரசு விடுமுறை இருக்காதாம்.
அதே போல ரம்சான், பக்ரீத் அன்று முஸ்லீம் ஊழியர்களுக்கும், கிருஸ்துமஸ், புனித வெள்ளியன்று கிருஸ்துவரஊழியர்களுக்கும் விருப்ப விடுப்பு தரப்படும். இது விடுப்பே (leave) தவிர விடுமுறையாக (holiday) இருக்காது.
இதற்காக இப்போதைய கேசுவல் லீவின் எண்ணிக்கையை 14ல் இருந்து 20 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிக்கையை பணியாளர் சீர்த்திருத்தத் துறைச் செயலாளர் மெய்கண்ட தேவன் மூலமாகஅனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் பரிசீலனைக்காக அனுப்பி வைத்துள்ளது அரசு.
அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு இதற்கான உத்தரவு வெளியாகலாம்.












Click it and Unblock the Notifications