ஜெயலலிதாவின் வீட்டில் கமாண்டோ வீரர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை கமாண்டோ வீரர்ரிவால்வரால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ளது. இங்கு அதிரடிப்படை கமாண்டோவீரர்களும், போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கமாண்டோப் படையில் இடம் பெற்றிருந்த முத்துக்கிருஷ்ணன் என்ற வீரர் இன்று காலை ஜெயலவிதாவின் வீட்டின்முன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
திடீரென அவர் தன்னிடமிருந்த ரிவால்வர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார். இதில் மூளை சிதறிசம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இந்தத் தற்கொலை போயஸ் கார்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கிருஷ்ணன் தற்கொலைசெய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications