அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வாகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில்தறபோதைய பொதுச் செயாளரும், முதல்வருமான ஜெயலலிதா பெயர் மட்டுமே போட்டியில்உள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று பெறப்படும் என்றுஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல்தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிதியமைச்சர் பொன்னையன் வேட்புமனுக்களைப் பெற்றார்.

ஜெயலலிதாவுக்காக ஏராளமான அதிமுகவினர் மனு கொடுத்தனர். கெடு நேர முடிவில்ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் பெயரிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால், தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமையன்றுபோட்டியின்றி ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவது இது 3-வதுமுறையாகும். கடந்த 1987ம் ஆண்டு அதிமுக உடைந்து, ஜெயலலிதா தலைமையில் ஒரு அணிஉருவானபோது முதல் முறையாக ஜெயலலிதா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் இணைந்த பிறகு 2-வதுமுறையாக பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு தற்போது 3-வது முறையாக தேர்வுசெய்யப்படவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+