For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 பேரைக் கொன்ற மதுரை டாக்டர் விழுப்புரத்தில் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாரை விஷ ஊசி போட்டுக் கொன்றவழக்கில் காஞ்சிபுரம் அருகே கைது செய்யப்பட்ட மதுரை டாக்டர், மதுரைக்கு கொண்டு வரப்படும்வழியில் விழுப்புரத்தில் மாரடைப்பால் இறந்தார்.

மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ரங்கநாதன். இவர் அதிக அளவில் கடன் வாங்கியதால்அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்26ம் தேதி தனது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷ ஊசி போட்டுக் கொலைசெய்தார். பின்னர் தலைமறைவாகி விட்டார்.

அவரை மதுரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்திருக்கழுக்குன்றத்தில் ரங்கநாதன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரைபோலீஸார் திருக்கழுக்குன்றத்திற்கு விரைந்தனர். அங்கு ரங்கநாதனைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீஸ் வேனில் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டார். விழுப்புரம் அருகேவந்தபோது, டாக்டர் ரங்கநாதன் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை விழுப்புரம்அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கடும்மாரடைப்பு காரணமாக ரங்கநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கேயே அவரது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X