3 நீதிபதிகள் விசாரணை: 6 நிறைமாத கர்ப்பிணிகள் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களிடம் நேற்று நடந்த 5-வது நாள் விசாரணையின்போது 6 நிறை மாத கர்ப்பிணிகள்கலந்து கொண்டனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள்கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 5-வது நாள் விசாரணை நடந்தது. இதில்மொத்தம் 186 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 6 பேர் கர்ப்பிணிகள். தாங்கள் கர்ப்பமாக இருப்பதால் விடுமுறை எடுத்திருந்ததாகவும்,ஆனால் தங்களையும் அரசு டிஸ்மிஸ் செய்து விட்டதாகவும் இவர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்ததாகவெளியில் கூறப்பட்டது.
2 நாள் விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை தொடங்கும். அப்போதுசுகாராதத்துறை, ஜவுளி, கைத்தறி மற்றும் காதித்துறையைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணைநடக்கும். இதுவரை மொத்தம் 804 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications