அப்துல் கலாமை சந்தித்தார் ஷரோன்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன், இன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்குவரும் முதல் இஸ்ரேல் பிரதமர் ஷரோன். நேற்று டெல்லி வந்து சேர்ந்து ஷரோன், இன்று காலைகுடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசினார்.
சுமார் முக்கால் மணி நேரம் இரு தலைவர்களும் உரையாடினர். அவர்களது பேச்சுவார்த்தையில், இருநாட்டு உறவுகள், மத்திய கிழக்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையின்போது, வெளியுறவுத்துறை செயலாளர் அபயங்கர், இஸ்ரேலுக்கான இந்தியத்தூதர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் ஆகியோரும் உடனிருந்தனர்.
முன்னதாக ராஜ்காட் சென்ற ஷரோன் அங்குள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications