ஸ்ரீநகர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் அருகே பழ மார்க்கெட்டில் தீவிரவாதிகள் வைத்த கார்வெடிகுண்டுக்கு 8 பேர் பலியானர்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியில் உள்ள பரிம்போரா எனற இடத்தில் உளள பழ மார்க்கெட்டின்மார்க்கெட்டின் நுழைவாயில் பகுதியில், இன்று காலை 9.45 மணிக்கு இந்த கார் குண்டு வெடித்தது.இதில் மூத்த ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஏ.சி.சோப்ரா, ஒரு ராணுவ கேப்டன், 2 ராணுவ வீரர்கள்உள்பட 8 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு ராணுவ வாகனம், இரண்டு லாரிகள், 2 இருசக்கர வாகனங்களும்சேதமடைந்தன.
குண்டுவெடிப்பையடுத்து அந்தப் பகுதியில் ராணும் குவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள்பதுங்கியுள்ளனரா என்றும், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது. குண்டுவெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரைபொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications