லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டி: காங். தலைவர்
சென்னை:
தமிழகத்தில் லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் நிவாஸ் மிர்தா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுடன் கூட்டணிவைக்க காங்கிரஸ் தயாரில்லை. அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சியாகஅதிமுக உள்ளது. எனவே அந்தக் கட்சியுடன் வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் கூட்டணிவைப்பதற்கான வாய்ப்பே இல்லை.அதேபோல, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கூட்டணியில் அது இருக்கும் வரை அக்கட்சியுடனும் கூட்டணிவைப்பதற்கான வாய்ப்பில்லை.தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு திமுக வெளியேறினாலும் கூட, அதனுடன் கூட்டணிவைப்பது தொடர்பாக காங்கிரஸின் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவுசெய்வோம்.தற்போதைய நிலவரப்படி லோக் சபா தேர்தலை தனித்துப் போட்டியிட்டு சந்திக்க காங்கிரஸ் கட்சிதயாராகி வருகிறது. தேவைப்பட்டால், சில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications