For Daily Alerts
Just In
ராமநாதபுரத்தில் 10,000 மீனவர்கள் வேலைநிறுத்தம்
ராமேஸ்வரம்:
இலங்கைக் கடற்படை கடந்த 3 மாதங்களில் பிடித்துக் கொண்டு போயுள்ள 36 மீனவர்களைவிடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 மீனவர்கள் இன்று மீன் பிடிப்புப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டனம், ஜெகதாப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36படகுகளையும், 36 மீனவர்களையும் கடந்த 3 மாதத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்துக்கொண்டு போயுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டமீனவர்கள் சுமார் 10,000 பேர் மீன் பிடிப்புப் பணிகளை நிறுத்தி வைத்துப் போராட்டம்நடத்துகிறார்கள்.
புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
Comments
Story first published: Saturday, September 6, 2003, 5:30 [IST]