மருத்துவமனையில் சிசுக்கள் சாவு: மனித உரிமை கமிஷன் விசாரணை
சென்னை:
திருச்சி அரசினர் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவமனையில் 6 பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன்இறந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் கமிஷன் விசாரணைக்கு கமிஷன் உறுப்பினர் நீதிபதிசம்பந்தம் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசினர் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த 6பச்சிளம் குழந்தைகள் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டன. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும்ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமாகவே குழந்தைகள் இறந்து விட்டதாக புகார் கூறப்பட்டது.
நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்கள் வற்புறுத்தவதாகவும், லஞ்சம் கொடுக்க மறுக்கும்நோயாளிகள் சரிவர கவனிக்கப்படுவதில்லை எனவும், இதன் காரணமாகவே 6 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், அந்த குழந்தைகளின் பிணங்களை எடுத்துச் செல்லவும் லஞ்சம் கொடுக்கவேண்டியிருந்தது என்றும் நோயாளிகள் குமுறலை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதுதொடர்பாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் குழு நேரில்சென்று விசாரணை நடத்தியது. மேலும் குழந்தைகள் இறந்தது தொடர்பாக சென்னையில் உள்ளமாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்தநீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டி.எஸ்.பி.புருஷோத்தமனுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications