தமிழ் செம்மொழி கோரிக்கை: "மத்திய அரசு பரிசீலிக்கும்"
நாகர்கோவில்:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரிவருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுபிரதமர் வாஜ்பாயை சந்தித்து மனு கொடுத்தது.
அந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்கும் என்று பிரதமர் வாஜ்பாய்உறுதிமொழி கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை வேறு இடத்தில் கட்ட உத்தேசித்திருப்பது நல்ல முடிவாகும்.தற்போதுள்ள கட்டடத்தில் இட நெருக்கடி நிலவுகிறது. எனவே புதிய இடத்தில் தலைமைச் செயலகம்அமைவது தேவையான ஒன்றுதான்.
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுவதை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுவரவேற்க வேண்டியதுதான். காரணம், தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நேர்த்திக் கடனைசெலுத்த விலங்குகளைப் பலியிடாத பல்வேறு முறைகள் உள்ளது.அதை பக்தர்கள்கடைப்பிடிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம்புதூர் பகுதியில் ரப்பர் பூங்கா அமைக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 7 கோடியில் உருவாகும் இந்த ரப்பர் பூங்காவின் முதல் கட்டப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிவடையும்.
இதேபோல, கொளச்சல் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றார் அவர்.