கெளரவ ரேசன் அட்டைக்கு மாறியோர் வெறும் 3 லட்சமே
கோவை:
தமிழகம் முழுவதிலும் 3. 17 லட்சம் பேர், தங்களது ரேஷன் அட்டைகளை, கெளரவ அட்டைகளாகமாற்றியுள்ளதாக தமிழக அரசின் நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் கோலப்பன் தெரிவித்துள்ளார்.
இன்னும் சுமார் 37 லட்சம் பேர் தங்களது ரேசன் அட்டைகளை கெளர அட்டையாக மாற்றவில்லை. இதனால்,அரசின் இந்தத் திட்டத்துக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு இருப்பது கண் கூடாகத் தெரிகிறது.
கோவையில் ரேஷன் கார்டுகளை, கெளரவ அட்டைகளாக மாற்றும் பணியை மேற்பார்வையிட்ட கோலப்பனபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இதுவரை 3.17 லட்சம் கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை, கெளரவ அட்டைகளாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
மாதம் ரூ. 5000க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், இந்த மாத இறுதி வரை, தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றார் அவர்.
இல்லாவிட்டால் அரசே இந்த கார்டுகளை வலுக்கட்டாயமாக கெளரவ அட்டைகளாக மாற்றும்.












Click it and Unblock the Notifications