Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரீனாவில் பொதுக் கூட்டம், மதக் கூட்டம் நடத்த கூடாது: கமிஷனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் பொதுக் கூட்டங்கள், மத சார்பான கூட்டங்களோ நடத்தக் கூடாது என சென்னைமாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் கூறினார். இந்தத் தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், மெரீனா கடற்கரையில் அரசியல் கட்சிகளின் கூட்டமோ,மத சார்பான கூட்டமோ நடத்தக் கூடாது என அரசு தடை விதித்துள்ளதால், அரசு அனுமதிக்கும் வரை நாங்களும்அதை அனுமதிக்க மாட்டோம்.

சென்னையில் பொதுக் கூட்டங்கள் நடத்த விரைவில் மாற்று இடம் ஒதுக்கப்படும். இதற்காக தீவுத்திடல் உள்ளிட்டசில பகுதிகளை ஒதுக்கலாமா என்று பரிசீலித்து வருகிறோம் என்றார்.

இளங்கோவன் எதிர்ப்பு:

மெரீனாவில் பொதுக் கூட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகதமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடந்த முப்பெரும் விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை முதலில் இடித்தனர். பின்னர் மேலும் சில கட்டடங்களை இடித்தனர்.இப்போது அங்கு பொதுக் கூட்டமே நடத்தக் கூடாது என்று தடை விதிக்கின்றனர். இதை எதிர்த்து போராட்டம்நடத்துவோம்.

மத்திய அரசை எதிர்த்து 30ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்துகிறோம். மதுரையில் நடக்கும்போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+