உள்ளாட்சித் தேர்தல்: 192 பேர் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 451 உள்ளாட்சி இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 192 பேர் போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 451 உள்ளாட்சி இடங்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மனு பரிசீலனை மற்றும் மனு வாபஸ் ஆகியவை முடிந்து விட்டன.
மொத்தம் உள்ள 451 இடங்களில், 192 தொகுதிகளில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால் அவர்கள்போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
68 இடங்களில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. (இவற்றில் கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களும் அடங்கும்).
மற்ற 191 இடங்களில் 588 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர் என்றார் பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications