For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடலை அடக்கம் செய்ய விடாமல் மயானத்தை மூடிய ஜமாத்: பெரம்பலூரில் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

தனது தாயாரின் பிரேதத்தை அடக்கம் செய்ய மயானம் திறக்கப்படவில்லை என்று கூறி பெரம்பலூர் முஸ்லீம்ஜமாத் மீது ஒரு டாக்டர் போலீஸில் புகார் கொடுத்தார்.

அப்படி இருந்தும் ஜமாத்திடம் டாக்டர் மன்னிப்பு கேட்ட பிறகே மயானத்தில் அவரது தாயாரை அடக்கம் செய்யஅனுமதி கிடைத்தது.

பெரம்பலூரைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் ஜபருல்லா கான். இவரது தாயார் பாத்திமா பீவி, திருச்சியில்மரணமடைந்தார். இதையடுத்து சொந்த ஊரான பெரம்பலூருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

தனது தாயான் உடலை அடக்கம் செய்ய மயானத்தை திறக்குமாறு அங்குள்ள முஸ்லீம் ஜமாத்திடம் கோரிக்கைவிடுத்தார் கான். ஆனால், மயானத்தை திறந்து விட ஜமாத் மறுத்து விட்டது. காரணம், ஏற்கனவே ஜமாத் சார்பில்நடத்தப்பட்டு வரும் ஒரு ஆதரவற்றோர் பள்ளி நிர்வாகம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் கான்.

இதனால் அவர் மன்னிப்பு கேட்டால்தான் மயானம் திறக்கப்படும் என்று கூறி விட்டனர்.

இதையடுத்து பெரம்பலூர் போலீஸில் புகார் கொடுத்தார் கான். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

உடலை அடக்கம் செய்வதில் தொடர்ந்து பிரச்சினை நிலவவே, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கானின் தம்பிமுபாரக் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறுமாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.

போலீஸார் ஜமாத்திற்கு விரைந்தனர். ஆனால், டாக்டர் மன்னிப்பு கேட்டால்தான் மயானக் கதவு திறக்கப்படும்என்று ஜமாத் நிர்வாகிகள் உறுதியாக நன்றனர். இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் ஜமாத் நிர்வாகிகளிடம்வழக்கு தொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் டாக்டர் ஜபருல்லா கான்.

இதையடுத்து இரவு 10 மணியளவில் ஜமாத் மயானம், உடல் அடக்கத்திற்காக திறந்து விடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X