போலீஸ்காரரின் காட்டுத்தனம்: கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி- உதை
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குள்நுழைந்ததற்காக ஆட்டோ டிரைவரை போலீஸ்காரர் அடித்து உதைத்தார்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ளஅரசினர் மருத்துவமனைக்கு பெரம்பூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக் கொண்டுஅசோக் குமார் என்ற ஆட்டோ டிரைவர் வந்தார்.
கர்ப்பிணி வலியால் துடித்ததால் நேராக மகப்பேறு பிரிவுக்கு ஆட்டோவை கொண்டு செல்ல முயன்றார். அப்போதுஆட்டோவை வாசலில் தடுத்து நிறுத்தினார் ஒரு போலீஸ்காரர். ஆட்டோ எல்லாம் உள்ளே போகக் கூடாது என்றுதடுத்தார்.
கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமைய நேரில் பார்த்த பின்னரும் ஆட்டோவை உள்ளே விட போலீஸ்காரர்மறுத்தார். கர்ப்பிணியை நடக்கச் சொல்கிறீர்களே, இது நியாயமா என்று ஆட்டோ டிரைவரும் பெண்ணுடன்வந்தவர்களும் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், என்னை எதிர்த்தா பேசுகிறாய் என்று கேட்டுக் கொண்டே சரமாரியாகஆட்டோ டிரைவரைத் தாக்கினார். கீழே இழுத்துப் போட்டும் மித்திதார். இதில் அசோக் குமாரின் மூக்கு உடைந்துரத்தம் வெளியேறியது. காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது.
இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து அந்த போலீஸ்காரரை கெரோ செய்தனர். இதையடுத்துஅவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து கொண்டார்.
கடும் கோபத்தில் இருந்த பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களைசமாதானப்படுத்தினர். காயமடைந்த ஆட்டோ டிரைவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்ட அந்த காட்டான் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.