திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் கைதாகி ஜாமீனில் விடுதலை- மீண்டும் கைது செய்ய முயற்சி
விழுப்புரம்:
திமுக தீர்மானக் குழு உறுப்பினரும், தலைமைக் கழக பேச்சாளருமான வெற்றி கொண்டான் தமிழக போலீசாரால்வழக்கம்போல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. ஆனால், அவரைஇன்னொரு வழக்கில் மீண்டும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் சமீபத்தில் நடந்த திமுக மாவட்ட மாநாட்டில் வெற்றிகொண்டான் கலந்து கொண்டு, நெஞ்சைஉருக்கிய அந்த நாள் என்ற தலைப்பில், நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்துபேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக வெற்றிகொண்டான் மீது விழுப்புரம் போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்த விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
இந் நிலையில் சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த திமுகபொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார் வெற்றிகொண்டான்.
அப்போது விழுப்புரம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம் குற்றவியல் நீதிபதிமுருகனின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை 15 நாள்சிறைக் காவலில் வைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் வெற்றி கொண்டான்.
ஜாமீனில் விடுதலை
இந் நிலையில் இன்று காலை வெற்றிகொண்டான் தரப்பில் விழுப்புரம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாத்த நீதிபதி சின்னச்சாமி, அவரை ஜாமீனில் விடுதலை செய்துஉத்தரவிட்டார்.
இதையடுத்து வெற்றி கொண்டான் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை திமுக எம்.பி ஆதிசங்கர் மற்றும்எம்.எல்.ஏ. புகழேந்தி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது, வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாகவெற்றிகொண்டான் மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரைக் கைது செய்யவந்தவாசி போலீசார் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
அப்போது வெற்றி கொண்டானை சுற்றி வளைத்த கடலூர் போலீசார், வந்தவாசி போலீசார் வர தாமதமாகிறது.இதனால் உங்களை கைது செய்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வைத்திருக்குமாறு வந்தவாசி போலீசார்கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் நீங்கள் எங்களுடன் வர வேண்டும் என்றார்.
இதற்கு ஆதிசங்கர், புகழேந்தி மற்றும் வெற்றிகொண்டான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கைது செய்வதாக எழுதித் தந்துவிட்டு கைது செய்யுங்கள், சும்மா காவல் நிலையத்துக்கு வர முடியாது எனவெற்றிகொண்டான் கூறினார். மேலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னரும் என்னைக் கைது செய்வதுசட்டவிரோதமானது என்றார்.
தொடர்ந்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் வெற்றிகொண்டான் மீண்டும் கைதாவது உறுதியாகிவிட்டது.
-->