முட்டை திருடிய அரசு மருத்துவமனை நர்ஸ், ஊழியர் அதிரடி டிரான்ஸ்பர்
தர்மபுரி:
ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தருவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் திருடிவீட்டுக்கு எடுத்துச் சென்ற நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் முட்டை, பிரட் என நோயாளிகளுக்குத் தர வேண்டிய உணவுப் பொருள்களைஊழியர்கள் திருடுவது மிகவும் வாடிக்கையானதாகும்.
இந் நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய்சுந்தரம் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது ஓசூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தமுட்டைகளைத் திருடி வந்த நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோர் அமைச்சரின் விசாரணையின்போதுசிக்கினர்.
அவர்களை உடனடியாக பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிட்ட அமைச்சர், அவர்கலை உடனே வேறுஇடத்திற்கு மாற்றவும் உத்தரவு பிறப்பித்தார்.