இந்திய ஹாக்கி அணிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை:
பாகிஸ்தானை தோற்கடித்து ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி இன்றுசென்னை திரும்பியது. விமான நிலையத்தில் இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
வழக்கமாக கிரிக்கெட்டைத் தான் நம்மவர்கள் ஒரு விளையாட்டாகவே மதிப்பார்கள். ஹாக்கி, புட் பால் போன்றவிளையாட்டுக்களை நம் ஆட்கள் கண்டுகொள்வதே இல்லை.
இந் நிலையில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து உலக அளவிலான போட்டிகளில் வெல்ல ஆரம்பித்துள்ளது.இதையடுத்து ஹாக்கியையுைம் நம்மவர்கள் கொஞ்சம் கண்டுகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் மலேசிய தலைநகர் கோலாலம்பூல் நடந்த 6-வது ஆசியக் கோப்பை ஹாக்கிப்போட்டியின் இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை 4க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்பட்டத்தை வென்றது இந்தியா.
கோப்பையை வென்ற தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இன்று காலை தாயகம்திரும்பியது. விமானம் மூலம் சென்னை வந்த ஹாக்கிரர்களுக்கு, தமிழ்நாடு ஹாக்கி சங்க நிர்வாகிகளும் பெரும்திரளான ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்து திக்குமுக்காட வைத்தனர்.
அஞ்சுவுக்கு ரூ. 25 லட்சம்: ஜெ. வழங்கினார்
இதற்கிடையே பாரிதில் நடந்த உலக தடகளப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அஞ்சு ஜார்ஜுக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். அவரது கணவரும்,பயிற்சியாளருமான பாபி ஜார்ஜுக்கு ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்,
கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு தமிழகத்தில் தான் வசித்து வருகிறார். தமிழகத்தின் சார்பில் பல போட்டிகளில்பங்கேற்று ஏற்கனவே ஜெயலலிதாவிடம் பரிசுகளை வென்றவர் இவர்.
அதே போல சமீபத்தில் லூதியானாவில் நடந்த 31வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதமிழ வீரர்கள் 19 பேருக்கு மொத்தம் ரூ. 9.25 லட்சத்துக்கான காசோலைகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
பெங்களூரில் நடந்த 43வது தேசிய தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகவீராங்கனை சுரேகாவுக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 19 வயதானசுரேகா, உயரம் தாண்டுதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications