For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்துணவுக்கு நிதி குறைப்பு இல்லை: வளர்மதி விளக்கம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சத்துணவுக்கான நிதியைக் குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. மாறாக எத்தனை பேர் பள்ளிக்குவருகிறார்களோ அத்தனை பேருக்கு மட்டும் சத்துணவு வழங்கினால் போதும் என்று மட்டுமே அரசுஉத்தரவிட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதத்தைக் குறைக்கஅரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அமைச்சர் வளர்மதி மறுத்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சத்துணவுத் திட்டத்திற்கான நிதியைக் குறைக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை.

கிராம அளவில் சத்துணவுத் திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் கண்காணிக்க குழுக்கள்அமைக்கப்பட்டன. இந்த கண்காணிப்புக் குழுக்கள் அங்கவன்வாடிகள், சத்துணவு மையங்களில் தீவிர ஆய்வுநடத்தி சில பரிந்துரைகளை அரசிடம் கொடுத்தன.

அந்தப் பரிந்துரைகளின்படி பள்ளிக்கோ அல்லது அங்கன்வாடிக்கோ தினசரி எத்தனை மாணவர்கள்வருகிறார்களோ, அத்தனை பேருக்கு மட்டும் சத்துணவு வழங்கினால் போதும். கூடுதலாக உணவு தயாரித்து அதைவீணாக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவுக்கு, ஒரு குழந்தைக்கு 25 பைசா மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையை மாற்றி 35 பைசாவாக அதிகரித்துஉத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா.

மேலும் சத்தான உணவு வகைகளான பச்சைப் பயறு, கொண்டக் கடலை, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உணவில்சேர்க்குமாறும் முதல்வர் ஆணையிட்டார்.

அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தடங்கல் நேரக்கூடாது என்று முதல்வர் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். எனவே சத்துணவுக்கான நிதியைக் குறைப்பது என்றபேச்சே எழவில்லை என்று கூறியுள்ளார் வளர்மதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X