பணியின்போது "அதுக்குப்" போன போலீஸ்காரர்: பெண்ணுடன் சிக்கினார்- பொது மக்கள் தர்ம அடி
கோயம்பத்தூர்:
கோவையில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற போலீஸ்காரர் அந்தப் பணியை விட்டு பெண்ணுடன் உல்லாசமாகஇருந்தார். இதையடுத்து பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை குனியத்தூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் தனது உயிருக்கு கொலை மிரட்டல் இருப்பதாககூறியதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
கனகராஜ் என்ற காவலர் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டார். முஸ்தபா செல்லும் இடமெல்லாம்கனகராஜும் உடன் சென்று வருவார். முஸ்தபா வீட்டுக்கு தினசரி வந்து சென்றதால், அவரது பக்கத்து வீட்டில்வசித்து வரும் நாஜின்னிசா என்ற பெண்ணுடன் கனகராஜுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
இந் நிலையில் இரவு முஸ்தபா வீட்டுக்கு பாதுகாப்புக்கு வந்த கனகராஜ், முஸ்தபா தூங்கச் சென்றவுடன் நாஜின்னிசாவீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு இருவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
நாஜின்னிசாவின் வீட்டில் போலீஸ்காரர் இருக்கும் விஷயம் பக்கத்துக்கு வீட்டினருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அண்டை வீட்டினர் ஒன்றாகச் சேர்ந்து நாஜின்னிசாவின் வீட்டுக் கதவைத் தட்டி இருவரையும்வெளியே இழுத்தனர். பின்னர் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதையடுத்து இருவரும் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பணியில் இருக்கும்போது பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கனராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் தன்னை அடித்து விட்டதாக சிலர் மீது நாஜின்னிசாவும் புகார் கொடுத்தார். இதையடுத்து பொதுமக்களில் சிலர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-->











Click it and Unblock the Notifications