மசூதி இடிப்பு: ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்காலத் தடை
லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யஉத்தரவிட்ட ராய்பரேலி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
மேலும் ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜோஷி மீதான விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் துணைப் பிரதமர் அத்ாவனி, மத்திய அமைச்சர் ஜோஷி, உமா பாரதி,வி.எச்.பி. தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராய்பரேலி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அத்வானி விடுவிக்கப்பட்டார். இதற்கு அவர் மீதான குற்றச்சாட்டை சிபிஐசரியான முறையில் நீதிமன்றத்தில் விளக்காதது தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் ஜோஷி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அப்போது பிரதமர் வெளிநாட்டில்இருந்தார். இதனால் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு டெல்லி திரும்பிய பிரதமர் வாஜ்பாயை ஜோஷி சந்தித்துப் பேசினார்.அப்போது ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்றும், ராய்பரேலி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் ஜோஷி மேல் முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும், அவர் மீதான விசாரணையைத் தொடரவும்இன்று இடைக்காலத் தடை விதித்தது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
ஜோஷியின் மேல் முறையீட்டு மனு மீது வரும் நவம்ர் 4ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.
இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டவுடன் அது குறித்து பிரதமர் வாஜ்பாய், ஜோஷியுடன் தொலைபேசியில்பேசினார். நீதிமன்றத்தின் தடை மகிழ்ச்சியளிப்பதாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications