மகாமகம்: பாதுகாப்புக்கு 20,000 போலீஸார்
கும்பகோணம்:
கும்பகோணம் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகாமக திருவிழாவின்போது 20,000போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) ஐ.கே.கோவிந்த்தெரிவித்துள்ளார்.
1 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடக்கும் மகாமகத்துக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகாமக விழாவையொட்டிவிரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தம் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். முக்கியக் கோவில்கள், பொது இடங்களில்பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க தற்காலிக பாலங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.அதேபோல, பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீரைத் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையொட்டி மகாமகக் குளத்தின் அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் தளம் முதல்வர்ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த முறை நடந்த மகாமகத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் பலியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications