அரசுக்கு ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவில் தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு நாகப்பட்டனத்தில் நடந்தது. இதில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறுத்தி வைத்துள்ள பணிக் கொடை, ஓய்வூதிய பலன்கள், ஊதிய நிலுவை ஆகியவற்றை உடனடியாக தந்து உதவவேண்டும் என்று கூட்டத்தில் பேசிய ஓய்வூதிய அலுவலர் சங்கத் தலைவர் மாசிலாமணி அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
-->











Click it and Unblock the Notifications