For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட்டை டிராவல் ஏஜென்சிக்கு விற்ற ஊழியர் மீது ஏ.கே.மூர்த்தி நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தனியார் டிராவல் ஏஜென்சிகளுக்கு விற்ற ரயில்வே டிக்கெட் பதிவுப்பிரிவு ஊழியரை அதிரடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார் ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி அதிரடி சோதனை நடத்தினார். அப்போது முன் பதிவுடிக்கெட்டுக்களை டிராவல் ஏஜென்சிக்கு விற்று வந்த கிருஷ்ணகுமார் என்ற ஊழியர் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மூர்த்தி உத்தரவிட்டார்.

சமீபத்தில் தனக்கு இடமாற்றம் கேட்டு லஞ்சப் பணம் கொடுத்த ரயில்வே அதிகாரியை போலீசில் பிடித்துக்கொடுத்தார் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டதால், அவர் மீதானபுகாரை வாபஸ் வாங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X