திருப்பதியில் கண்ணி வெடித் தாக்குதல்: நாயுடு காயங்களுடன் உயிர் தப்பினார்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதியில் இன்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காயங்களுடன் உயிர்தப்பினார்.

ஒரு அமைச்சர் உள்பட பலரும் காயமடைந்துள்ளனர். திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில்பங்கேற்க முதல்வர் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார். இன்று மாலை 4.25 மணியளவில் காட்ரோட்டில் அவரது கார் வரிசை சென்றபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது.

இதில் சந்திரபாபு நாயுடுவின் கார் உள்பட பல கார்கள் சேதமடைந்தன. இதில் நாயுடும் அவரது கார் டிரைவரும்காயமடைந்தார். உடனடியாக நாயுடு, திருமலையில் உள்ள எஸ்.வி.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இன்னொரு காரில் வந்து கொண்டிருந்த ஆந்திர சாப்ட்வேர் வளர்த்துறை அமைச்சர் சந்திரசேகர் ரெட்டி, எம்.எல்.ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் காயமடைந்தார். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நக்சல்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெடித்துச் சிதறியது கிளேமோர் மைன் என்ற ரகத்தைச் சேர்ந்த கண்ணிவெடியாகும். இது சாலையோர மரத்தில்புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த ரக கண்ணிவெடிகளை அதிகம் பயன்படுத்துவது நக்சல்கள்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+