For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி: சென்னை பக்தர்களின் ஜீப் மலையில் மோதியது- 6 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி:

சென்னையில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் சென்ற ஜீப் மலைப் பகுதியில் பாறையின் மீது மோதியது.அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

திருப்பதியில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்அங்கு குவிந்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து 6 பேர் ஜீப்பில் திருப்பதிக்குச் சென்றனர். திருமலையின் கீழே முதல் காட் ரோட்டில் இந்த ஜீப்சென்று கொண்டிருந்போது அதன் ஆக்சில் உடைந்தது. இதையடுத்து நிலைதடுமாறிய அந்த ஜீப் மலைப் பகுதியில்பாறையின் மீது மோதியது.

இதில் ஜீப்பில் இருந்த பயணிகளும் டிரைவரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உணவில் பல்லி: 17 பக்தர்கள் பாதிப்பு

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து திருப்பதி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பல்லி விழுந்தால்விஷமான உணவை உண்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமலையில் ஹோட்டலில் எலுமிச்சை சாதத்தை உண்ட அவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. அந்தஉணவில் ஒரு பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் திருமலையின் அஸ்வினிமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடல் நிலை தேறி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X