இனி ரயிலையே வாடகைக்கு எடுக்கலாம்
சென்னை:
பெரிய குழுவாக விடுமுறைப் பயணம், சுற்றுலா செல்ல விரும்புவோர் இனிமேல் ரயில்களை வாடகைக்கு எடுத்துச்செல்லலாம் என்று தென்னக ரயில்வேயின், சுற்றுலா வளர்ச்சிக்கான பொது மேலாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தை முதலில் பயன்படுத்தப் போவது லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவன ஊழியர்கள் தான். அந்தநிறுவனத்தைச் சேர்ந்த 700 ஊழியர்கள் ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து ஒரு வார காலம் கோவாசெல்கிறார்கள். இதற்காக ரூ. 7 லட்சத்தை வாடகையாக வழங்கியுள்ளனர் என்றார்.
இதுவரை ரயில்களில் ஒரு பெட்டி அல்லது இரண்டு பெட்டிகளை மொத்தமாக ரிசர்வ் செய்யும் முறை தான் இருந்துவந்தது. அரசியல் கட்சிகளின் விழாக்கள் என்றால் ஒரு ரயிலையை வாடகைக்கு விடுவதும் வழக்கத்தில் இருந்தது.
இந் நிலையில் யார் வேண்டுமானாலும் ரயிலை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற முறையை தென்னகரயில்வே இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications